இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 17, 2015

தமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு:

* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.

* சூரிய மின்சக்தியுடன் கூடிய 2.4 லட்சம் பசுமை வீடுகள் ரூ.4,680 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.2,930 கோடி ஒதுக்கீடு.

* உணவு தானிய உற்பத்தியில் 110.02 லட்சம் மெட்ரிக் டன் என்ற அதிகபட்ச அளவு எட்டப்பட்டுள்ளது.

* 47,735  கறவை மாடுகள், 21.91 லட்சம் வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

* மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ரூ.18,302 கோடிக்கு கடன் வசதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 4 ஆண்டுகளில் 3,315 மெகாவாட் மின்னணு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

* மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

* திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.330 கோடி செலவில் நீர் சேமிப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* குடிநீர்த் தேவையை சமாளிக்க பூண்டி ஏரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

* மீஞ்சூர், நெமிலிச்சேரியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

* இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இது உகந்த தருணம் இல்லை.

* தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெற தீவிர முயற்சி.

* மாநிலம் முழுவதும் 200 பொதுச்சேவை மையம் அரசு கேபிள் டிவி மூலம் அமைக்கப்படும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

* மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தேசிய நதிநீர் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வு.

* தமிழ் வளர்ச்சிக்காக ரூ.42.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அரசு கேபிள் டிவி சேவை மூலம் ஏழை மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை.

* சரக்கு, சேவை வரிவிதிப்புக்கு ஒத்தகருத்து ஏற்படுத்த தமிழகம் வலியுறுத்துகிறது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக  செயல்படுகின்றன.

* விலைவாசியை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

* 4,680 கோடி ரூபாயில் 2.4 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருகிறது.

* தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

* இலங்கை அகதிகள் அமைதியான வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ரூ.43.98 கோடியில் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தமிழ்ச்சங்க கட்டடம் கட்டப்படும்.

* மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக்கு பாராட்டு.

No comments:

Post a Comment