இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 15, 2015

குரூப் 4 தேர்வு முடிவு 45 நாளில் வெளியாகும்

குரூப்-4 தேர்வு முடிவு

குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு தேர்வு நடந்தது. 80 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வை பட்டதாரி பெண்கள் மட்டுமே எழுதமுடியும். இந்த தேர்வுக்கான வினா- விடை ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்கள், பணியில் சேர்ந்த பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் பணியை கண்காணிப்பார்கள். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுவார்கள். ஏற்கனவே நடந்து முடிந்த குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-4 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்ததேர்வை 10 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும்.

இந்த வருடம் நடத்தப்படும் தேர்வுகள்

மேலும் இந்த வருடம் எந்த எந்த தேர்வுகள் நடைபெறும்? அந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் எப்போது கொடுக்கப்படும்? எந்த தேதியில் தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரம் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் உதவி மருத்துவ அதிகாரிகள் 74 பணியிடங்களுக்கு தேர்வு மே மாதம் 31-ந்தேதி நடத்தப்படும். இதுபோன்ற பல தேர்வுகள் வர உள்ளன.

இவ்வாறு தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பேட்டியின்போது தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட:டு அதிகாரி வெ.ஷோபனா அருகில் இருந்தார்.

No comments:

Post a Comment