இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 28, 2015

பட்ஜெட்டில் வரி விலக்கு

4,44,200 ரூபாய்க்கு வருமான வரி சலுகை பெறுவது எப்படி?


சேமிப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு பல வித வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீடு பிரிமீயத்துக்கான வரி விலக்கு வரம்பு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு எடுக்க அனுமதி இல்லை. ஆனால், அவர்களின் மருத்துவ செலவுக்கு ரூ.30 ஆயிரம் வரை வரிவிலக்கு பெற அனுமதிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சில குறிப்பிட்ட நோய்களின் மருத்துவ செலவுக்கான வரி விலக்கு ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சுகன்ய சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி செலுத்தத் தேவையில்லை. பென்ஷன் நிதி திட்டம், புது பென்ஷன் திட்டம் ஆகியவற்றில் 80சிசிடி பிரிவின் கீழ் வரிவிலக்குக்கான வரம்பு ஸி1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வரிவிலக்கு விவரங்கள்:
80சி பிரிவின் கீழ் விலக்கு
(காப்பீடு, மியூச்சுவல் பண்ட் மற்றும் பிஎப் முதலீடுகள்)  ரூ.1,50,000
   
80சிசிடி பிரிவின் கீழ் விலக்கு
(பென்ஷன் திட்ட முதலீடு)    ரூ.50,000

வீட்டு கடன் வட்டிக்கான விலக்கு    ரூ.2,00,000

மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு
80டி பிரிவின் கீழ் விலக்கு    ரூ.25,000

போக்குவரத்து படிக்கான விலக்கு    ரூ.19,200

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்

வாக்காளர்கள் தங்களது கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும், சரிசெய்யவும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவில் "போலிகளே இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் திட்டத்தை' வரும் மார்ச் 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளவர்கள் தானாக முன்வந்து அதை நீக்கவும், வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்யவும், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்கள் தங்கள் பெயரை நீக்க படிவம் 7-யும், வாக்காளர் விவரங்களில் திருத்தம், ஆதார் எண் உள்ளிட்டவற்றைச் சேர்க்க படிவம் 8-யும் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் இந்த படிவங்களைப் பெற்று, கள ஆய்வு செய்தபின் 15 நாள்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் அடைவுத்தேர்வில் 35% பேர் தேர்ச்சி

கற்றல் அடைவுத்திறன் தேர்வில், வெறும் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, அரசு நிர்பந்தம் செய்வது, நடைமுறை ரீதியாக சாத்தியமானதா என, கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2012ல், அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல் ஆகிய அறிவை சோதிக்கும் வகையில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு (தற்போது 10ம் வகுப்பு) நடத்திய அடைவுத்திறன் தேர்வில், வெறும், 35 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவர்கள், விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என அரசும், அதிகாரிகளும் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர் கூறியதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 2012ம் ஆண்டில், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஒன்றியத்துக்கு, 10 பள்ளிகள் வீதம், 'ரேண்டம்' முறையில், தேர்வு செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.

* இதில், தமிழ் பாடத்தில், 61 சதவீதம், ஆங்கில பாடத்தில், 39 சதவீதம், கணிதப்பாடத்தில், 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

* அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல், அடிப்படை கணிதத்திறன் ஆகியவை கூட தெரியாமல், கிட்டத்தட்ட, 65 சதவீத மாணவர்கள் இருந்துள்ளதை, அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

* எட்டாம் வகுப்பு வரை எழுதப்படிக்கக்கூட தெரியாமல், பள்ளிக்கு வந்த மாணவர்கள் தான், தற்போது, 10ம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.

* இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசும், அதிகாரிகளும் உணர்வதில்லை.

* இன்று அரசு பள்ளிகளில், மாணவர்கள் தான், ஆசிரியர்களை மிரட்டும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில், சிறிது பிசகினாலும், அவர்கள் பள்ளியிலிருந்து நின்றுவிட வாய்ப்புள்ளது.

* எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பித்தும், அவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில், அடிப்படை திறன்களை கற்றுக்கொடுக்காத, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வித கெடுபிடியும் இல்லை.

* ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என கூறுகின்றனர். தவறினால், ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்கிறது.

* இதனால், மாணவர்களுக்கு புரியும் வகையில், பாடம் நடத்த வேண்டும் என்ற நிலை மாறி, மனப்பாடம் செய்ய வைத்து, தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்ற போக்கில், பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. * தேர்ச்சி சதவீதம் அதிகரித்தால் தான், கல்வித்தரம் அதிகரிக்கும் என்ற மனப்போக்கை, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் பின்பற்ற ஆரம்பித்திருப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து வாக்காளர்களும் இ-மெயில்,ஆதார் எண் சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேசிய வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு மற்றும் அங்கீகரிப்பு திட்டம் என்ற அந்த திட்டம், இந்த மாதம் மார்ச் 3-ந் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

நோக்கம் என்ன? இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள் தாமாக அதை தெரிவிக்க முன்வருவது; எதாவது திருத்தம் செய்யவேண்டும் என்றால் அதற்கான விண்ணப்ப படிவங்களைக் கொடுக்க வாய்ப்பை அளிப்பது; மேலும், தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை எதிர்காலத்தில் அளிப்பதற்கு வசதியாக, வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண், தங்களது அல்லது குடும்பத்தினரின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை கொடுப்பது ஆகியவையாகும்.

சிறப்பு முகாம்கள் இதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 12-ந் தேதியில் இருந்து ஜூலை வரை ஒவ்வொரு மாதமும் ஒரு முகாம் நடத்தப்படும். அப்போது, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், அதை நீக்குவதற்காக 7-ம் எண் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். சில தகவல்களை மாற்றவேண்டும் என்றால் அதற்காக எண் 8 படிவத்தை அளிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து மாற்ற வேண்டும் என்றால் அதையும் கொடுக்கவேண்டும்.

ஆதார் எண், செல்போன் எண் மேலும், அனைத்து வாக்காளரும் ஆதார் எண், செல்போன் எண், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்றவற்றையும் கொடுக்கவேண்டும். இந்த முகாமில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகள், உதவி அதிகாரிகள் இருப்பார்கள். அவர்கள் அந்த விண்ணப்பப் படிவங்களை வாங்கிக்கொள்வார்கள். விசாரணை தேவை என்றால் அதை முடித்து 15 நாட்களுக்குள் அந்த விண்ணப்பங்கள் குறித்து முடிவு செய்வார்கள்.

தண்டனை குற்றம் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பது தண்டனைக்குரிய குற்றம். எனவே உண்மையை கூறுவதற்கு அளிக்கப்படும் இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தவறில்லாத தேர்தல் நடப்பது உறுதி செய்யப்படும்.

Friday, February 27, 2015

மாணவர்கள் சுற்றுலா அழைத்துச்செல்லும் போது கவனிக்க வேண்டியவை

* பள்ளிக்கூட மாணவர்-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த மாவட்டத்திற்கு சுற்றுலா செல்கிறார்களோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.

* மழை அல்லது கடும் வெயில் காலங்களில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது. பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்

* மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.

* மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டுனர் மது அருந்துபவராக இருக்கக்கூடாது.

* சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பெற்றோரிடம் கூறி அவர்களின் முழு சம்மதத்துடன் அனுமதி கடிதம் பெறுவது அவசியம்.

* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுற்றுலா செல்ல வேண்டும். நீர்நிலைக்கு ...

* நீர் நிலைகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.

* கூடிய மட்டும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல அனைத்து முன்ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் கவனிக்க வேண்டும்.

* இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் அனைத்து தேர்வு கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ, மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 வரையிலும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 10 வரையும் நடைபெறுகின்றன. பிளஸ் 2 தேர்வை 8.43 லட்சம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வு தொடங்க இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அரசு அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அண்மையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா, மின்சார வாரியத் தலைவர் சாய்குமார், போக்குவரத்துத் துறை செயலாளர் பிரபாகர ராவ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் அமைந்துள்ள தேர்வுக் கூடங்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை அளிக்க வேண்டும் எனவும், மின்சாரம் அடிக்கடி தடைபடும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் உள்ள தேர்வுக் கூடங்களுக்கு மின்னாக்கிகளை (ஜெனரேட்டர்கள்) போதுமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகளை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் அறிவுறுத்தினார்.

மேலும், கிராமப் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு எளிதில் சென்று வர வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறையை கேட்டுக் கொண்டார். மாணவ, மாணவிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தேர்வுகளை எழுதுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தேர்வுக்கான வினாத்தாள்கள், விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கவும் அறிவுறுத்தினார். மேலும், விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா.பரிசீலிக்க அரசு உத்தரவு

அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: பள்ளிகளிலும், இதரக் கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள், ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட தீமைகள் நீடித்தால், மாணவர் சமுதாயம் அவர்களது ஒழுக்க நெறிகளிலிருந்து தவறி, இந்த சமுதாயம் மிகவும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் வளாகம், வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்த வேண்டும்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தக் கோரிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Thursday, February 26, 2015

பிரிட்டிஷ் கவுன்சில் புதிய திட்டம்

பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் சென்று படிப் பதற்காக எழுதப்படும் IELTS, TOEFL என்ற ஆங்கில தேர்வு களைப் போன்று பள்ளிப் பருவத் திலேயே மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்துகொள்ள இந்த தேர்வு உதவும்.

ஏப்டிஸ் தேர்வில் மாணவர் களின் பேசுதல், எழுதுதல், கேட்டல், வாசித்தல் திறன் சோதிக்கப்படும். கூடுதலாக ஆங்கில இலக்கணமும் சோதிக்கப்படுகிறது. இந்த தேர்வு நேற்று முன் தினம் (புதன்) டெல்லி யில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை யில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னையில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்களுக்கு இந்த தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியின் மாணவி ஆர்த்தி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில் ஏப்டிஸ் தேர்வை அறிமுகப்படுத்தி பேசிய பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் மீ குவி பார்கர் (Mei Kwei Barker) கூறும்போது, “இந்த தேர்வு 13 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. அந்த பருவத்தில் உள்ள மாணவர்கள் என்னென்ன சூழ்நிலைகளை எதிர் கொள்வார்களோ அதிலிருந்து தான் கேள்விகளும் கேட்கப்படு கின்றன. விருப்பமுள்ள பள்ளிகள் பிரிட்டிஷ் கவுன்சிலிடமிருந்து இந்த தேர்வுக்கான பாடதிட் டத்தை பெற்றுக் கொள்ளலாம். பள்ளிகளில் இதனைப் பயன் படுத்தி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மதிப்பீடு செய்து கொள்ளலாம்” என்றார்.

சோதனை முறையில் இந்த தேர்வை எழுதிய மாணவி ஷைலஜா கூறும்போது, “பள்ளி யில் எழுதும் ஆங்கில தேர்வுகளை விட இது வித்தியாசமாக இருந்தது. மற்றவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், எனது ஆங்கில திறன் எந்த அளவில் உள்ளது என்பதை நானே அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது” என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்திய தேர்வுகள் துறைத் தலைவர் டி.விஜயலக்‌ஷ்மி, தேர்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ப்ளஸ் 2 விடைத்தாள் கையாள்வதில் புதிய நடைமுறை

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும். அப்போது 2 மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளது.

இதனால் மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கியதும் உடனடியாக பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுத வேண்டும். விடைத்தாளில் வேறு எந்த குறியீடும் எழுத கூடாது என மாணவர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். தேர்வு முடிந்ததும் விடைத்தாளை முழுமையாக சரிபார்த்த பின்பே மாணவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாலாமணிமேகலை, ஷெர்மித்ரிச்சர்ட்சிறாப் மற்றும் தலைமைஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ரயில்வே பட்ஜெட்டில் மக்களை கவரும் அம்சம்

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில், மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய வசதிகள் - திட்டங்களின் விவரம்:

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு

பயணிகள் இனி 60 நாட்களுக்கு பதிலாக, 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தூய்மைக்கு தனித் துறை

* தூய்மைக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் தனித் துறை ஒன்று ஏற்படுத்தப்படும்.

* ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் உள்ள கழிப்பறைகளின் வசதிகளின் நிலை மேம்படுத்தப்படும். 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* ரயில் பெட்டிகளில், சுற்றுசூழலுக்கு உகந்த கழிப்பறைகள் பொருத்தப்படும்.

* இந்த ஆண்டு இன்னும் 17,000 கழிப்பறைகள் மாற்றி அமைக்கப்படும். ஆறு மாதங்களுக்குள் நவீன தொழில்நுட்ப ரீதியான வாக்யூம் கழிப்பறைகளை கொண்டுவருமாறு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர வடிவமைப்பை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

* படுக்கை விரிப்புகளுடன் கழிவுகளை சேகரிக்க ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பையை வழங்குவதற்கான சாத்தியகூறும் கண்டறியப்படும்.

* குளிர்சாதன வசதி இல்லாத ரயில் பெட்டிகளிலும் குப்பை தொட்டி வசதி விரிவாக்கப்படும்.

* ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்புகளை கணிணி வழியாக பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.

ஹெல்ப்லைன்கள்:

* 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் '138' எண் ஹெல்ப்லைன் வசதி.

* பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லாத வகையில் 182 எண்ணுள்ள தொலைபேசி வசதி.

5 நிமிடத்தில் பயணச் சீட்டு

* பயணச்சீட்டை எளிதாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை 5 நிமிடங்களில் பெறுவதற்கு 'ஆபரேஷன் 5 மினிட்ஸ்' என்ற புதிய வசதி.

* சில்லறை பெறுவதற்கான இயந்திரம், மாற்று திறனாளிகள் சலுகை கட்டணத்தில் கணிணிவழியாக பயணச்சீட்டுகளை பெறுதல்.

* ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளில் சேர்த்தல்.

* ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை பெறுதல் அறிமுகம்.

* விரும்பிய உணவை தெரிவு செய்து பெறுவதற்கு கணிணிவழி வசதியை ஏற்படுத்துதல். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கட்டை முன்பதிவு செய்யும்போது உணவிற்கும் பதிவு செய்யும் வசதி, தரமான உணவை வழங்கம் வகையில் தெரிவுசெய்யப்பட்ட கோட்டங்களில் பிரபல முகமைகளின் சமையல் அறை கூடங்கள், குடிநீர் விநியோக இயந்திர வசதி ஆகியவை இதில் அடங்கும்.

* பயணிகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வகையில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இயந்திர வசதி அளிக்கப்படும்.

* 2000 ரயில் நிலயங்களில் பொதுவான மையங்களின் வழியாக நிர்வகிக்கப்படும் ஒளிகாட்சி கட்டமைப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.

* ரயில்களின் புறப்பாடு வருகை குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* மகளிர் பாதுகாப்பிற்கு உதவும் வகையில், சில குறிப்பிட்ட முக்கிய தட ரயில் பெட்டிகளிலும் புறநகர ரயில்களிலும் மகளிர் பெட்டிகளிலும் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பொதுப் பெட்டிகளிலும் மொபைல் 'சார்ஜ்' வசதி

* சில குறிப்பிட்ட சதாப்தி ரயில்களில் பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* மொபைல் போன்களை 'சார்ஜ்' செய்யும் வசதி பொதுப் பெட்டிகளிலும் ஏற்படுத்தப்படும். படுக்கை வசதி பெட்டிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

வை-ஃபை வசதி

* பி-பிரிவு ரயில் நிலையங்களில் 'வை-ஃபை' சேவை அறிமுகப்படுத்தப்படும்.

* ரயில் நிலையங்களில் தாமே நேரடியாக பயன்படுத்தும் 'லாக்கர்' வசதி ஏற்படுத்தப்படும்.

* குறிப்பிடப்பட்ட ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும். மேலும், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும்.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் உயர் அடுக்குகளுக்கு செல்ல பயணிகளுக்கு வசதியான வகையில் ஏணிப்படிகளை அமைக்குமாறு தேசிய வடிவமைப்பு துறை கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு...

* மூத்த குடிமக்களுக்கு கீழ் நிலை படுக்கை வசதி அளிக்கப்படும்.

* மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கீழ் நிலை அடுக்குகளை வழங்க உதவி அளிக்குமாறு டிக்கெட் பரிசோதனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

* பெட்டிகளின் நடுப்பகுதி மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் ஒதுக்கப்படும்.

* நகரும் படிகட்டுகள், உயர் தூக்கிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் 'பிரய்லி' வசதி ஏற்படுத்தப்படும்