இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 02, 2015

மாநகராட்சி மேயர்களை ‘‘மாண்புமிகு” என்ற அடைமொழியுடன் அழைக்கவேண்டும் அரசாணை

சென்னை, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச்செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– மாநகராட்சி மேயர்கள் மற்றும் துணை மேயர்களை அழைப்பது குறித்தும், அவர்களுக்கு பதவிக்காலத்தில் வாங்க வேண்டிய வசதிகள் குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 14.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் மாநகராட்சி மேயரை ‘மாண்புமிகு மேயர்’ அல்லது ‘மாண்புமிகு மன்றத் தலைவர்’ அல்லது மன்றத்தலைவி என்று அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

20.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கும் முறை ரத்து செய்யப்பட்டது. பழையபடி அவர்களை ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்கவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. தற்போது 10.12.14 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைப்படி,, ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்கும் நடைமுறைக்குப் பதிலாக ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கவேண்டும் என்று அரசு கருதி அப்படியே ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment