இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 07, 2015

திருவள்ளுவர் குறித்த கட்டுரை போட்டி

திருவள்ளுவர் குறித்த கட்டுரைப் போட்டியை இம்மாத மத்தியில் ஆன்லைன் மூலம் நடத்துமாறு சிபிஎஸ்இ பள்ளிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி டெல்லியில் இதனைத் தெரிவித்தார். திருவள்ளுவர் தொடர்பாக பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜய் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்மிருதி இராணி, இந்த கட்டுரைப் போட்டியின் மூலம், திருவள்ளுவரின் வாழ்க்கை குறித்தும் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். மேலும் இந்த ஆன்லைன் கட்டுரைப் போட்டி, பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரின் படைப்புகள் தேசிய கல்விக் குழும பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி இராணி, புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் பெருமிதங்களையும் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment