இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 16, 2015

நாளை போலியோ முகாம்

தமிழகத்தில், நாளை 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், 70 லட்சம் குழந்தை களுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. * தமிழகத்தில், 43,051 சொட்டு மருந்து மையங் கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. * காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மையங்கள் செயல்படும். * ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் தவணையாக, வரும் 18ம் தேதியும், இரண்டாம் தவணையாக, பிப்., 22ம் தேதியும், சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். * தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன், சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில், மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். * புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். * சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, விரலில் மை வைக்கப்படும். இது விடுபடும் குழந்தை களை கண்டறிய உதவுகிறது. * முகாம் நாள் அன்று, சொட்டு மருந்து வழங்கும்படி, தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். * இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாளன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். * பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஆகிய இடங்களில், 1,652 நடமாடும் மையங்கள் மூலம், சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * மேலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக, தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. * நாளை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட, சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment