இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 03, 2015

தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பார்க்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் 1–1–15 தேதியை வாக்காளர் தகுதிக்கான (18 வயது பூர்த்தி அடைந்த) நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான வரைவுப் பட்டியல் 1–10–14 அன்று வெளியிடப்பட்டது. 1–1–15 அன்று 18 வயது பூர்த்தி அடையக்கூடிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்காக 31–10–14 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்த்துவிட்டு, அதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 31–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிறப்பு முகாம்கள் அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தங்கள், பெயர் இடமாற்றம் போன்றவற்றுக்காக வாக்குச்சாவடிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.

விண்ணப்பங்களை கொடுப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதற்காக தனியார் கம்ப்யூட்டர் மையங்களிலும் தேர்தல் கமிஷன் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாளை வெளியாகிறது கடந்த அக்டோபர் 31–ந்தேதியுடன் விண்ணப்பங்களை பெறும் பணி நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. தகுதியான விண்ணப்பங்களை ஏற்று, அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

மேலும் பெயர்த் திருத்தங்கள், பெயர் நீக்கம் போன்ற பணிகள் நடந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து இறுதிப் பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி வாக்காளர் இறுதிப் பட்டியல் நாளை காலை வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் பார்ப்பதற்காக இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:–

இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களும் ஏராளமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 5–ந்தேதி (நாளை) மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, தாலுகா மற்றும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஜனவரி 25–ந்தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment