இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 13, 2015

மாலை 6.00 மணிக்குமேல் சிறப்பு வகுப்பு கூடாது

'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை கண்டித்துள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு: * அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வில் வெற்றி பெற செய்வதே, நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும். * திறமையான மாணவர் தலைமையில் நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில் குழு பிரிக்க வேண்டும். அந்த குழுவுக்கு, தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தரவேண்டும். * சிறு வினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதி காட்டச் செய்து ஆசிரியர் திருத்த வேண்டும். * எந்தக் காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment