இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 01, 2015

வாக்காளர் பட்டியல் ஜன 5ல் வெளியீடு

வாக்காளர் இறுதி பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை (மொத்தம் 25 நாட்கள்) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன. மேலும், அக்டோபர் 26, நவம்பர் 2ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் புதிதாக வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,28,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஆன்லைன் மூலம் 62,303 பேரும், முகாம்களுக்கு நேரில் வந்து 15,66,297 பேரும் விண்ணப்பித்திருந்தனர். 6ஏ(வெளிநாடுவாழ் இந்தியர்) விண்ணப்பிக்க 225 பேரும், பெயரை நீக்க 42,832 பேரும், திருத்தம் செய்ய 2,86,208 பேரும், தொகுதி விட்டு தொகுதி மாற 1,10,555 பேர் என மொத்தம் 20,68,420 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பின்னர், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து வீடு, வீடாக சென்று கள விசாரணையை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். கள விசாரணையின் போது விவரங்கள் தவறானவை என சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர் ந்து சம்பந்தப்பட்ட வாக் காளர் பதிவு அதிகாரிகளால் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்நிலையில், புகைப்படத்து டன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி வழங்கப்படும். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்படும். அதன் பின்னரும் வாக்காளர்கள் பட்டி யலில் சேர்க்கும் பணி நடைபெறும். வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க நடவ டிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரசாரம் மேற்கொள்ளப்படும்‘ என்றனர்.

No comments:

Post a Comment