இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 30, 2015

10ஆயிரம் பேர் தேர்வு

10 ஆயிரம் பேர் தேர்வு
2015–ம் ஆண்டு குரூப்–1 அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். 2014–ம் ஆண்டு 15 ஆயிரம் பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

*2015–ம் ஆண்டு பிப்ரவரி 2–வது வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகும். இந்த பணிக்கு 4 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26–ந்தேதி நடைபெறும்.

*குரூப்–2 நேர்முகத்தேர்வு உள்ள 904 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 3–வது வாரத்தில் வெளியாகும். முதல்நிலை எழுத்துத்தேர்வு மே மாதம் 10–ந் தேதியும், மெயின்தேர்வு செப்டம்பர் 26–ந் தேதியும் நடைபெறும்.

*குரூப் 3 நேர்முகத்தேர்வு கொண்ட 25 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் 17–ந்தேதி நடத்தப்படும்.

மருத்துவர்கள்
* உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க பிப்ரவரி 2–வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். இதற்கான தேர்வு மே மாதம் 31–ந் தேதி நடைபெறுகிறது.

*சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, துணை சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்து மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4–வது வாரத்தில் வெளியாகிறது. தேர்வு ஜூன் மாதம் 14–ந்தேதி நடைபெறுகிறது.

*புள்ளியியல் புலன்ஆய்வாளர்கள்(ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்கள்) காலிப்பணியிடங்கள் 268 உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4–வது வாரத்தில் வெளியாகும். தேர்வு ஜூன் 20–ந்தேதி நடைபெறும்.

குரூப்–1 தேர்வு
*47 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். முதல் நிலைத்தேர்வு ஜூலை 5–ந் தேதியும், மெயின்தேர்வு டிசம்பர் 5–ந் தேதி முதல் 7–ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

*564 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்–2 ஏ (நேர்முகத்தேர்வு இல்லாதது) தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் 2–வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்டு 16–ந்தேதி நடைபெறும்.

*வட்டார சுகாதார புள்ளியியல் நிபுணர்கள்(பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்ட்சியன்) காலிப்பணியிடங்கள் 36 உள்ளன. அந்த பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு ஏப்ரல் மாதம் 4–வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 12–ந்தேதி நடைபெறும்.

கிராம நிர்வாக அலுவலர்
*கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் இன்னும் வந்து சேரவில்லை. தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதம் 4–ந் தேதி நடைபெறுகிறது.

*வன பயிற்சியாளர் (பாரஸ்ட் அப்ரண்டிஸ்) காலிப்பணியிடங்கள் 27 உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 31–ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3–வது வாரத்தில் வெளியாகும்.

* குரூப் –4 காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு நவம்பர் 15–ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment