இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 30, 2014

10&12ம் வகுப்பு PTA QUESTION BANK கிடைக்குமிடங்கள்

பத்தாம் வகுப்பு ப்ளஸ் டூ அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11    வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17    புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)

டிசம்பர் 18    வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22    திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23    செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17    புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - கணிதம்

டிசம்பர் 22    திங்கள்கிழமை - அறிவியல்

டிசம்பர் 23     செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

Tuesday, October 28, 2014

தமிழகத்தில் 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!


தமிழகத்தில் உள்ள 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு திட்டக்குழுவின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு  கடந்த ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு,  2011-2012 ஆம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என விதி எண் 110 ன் கீழ் அறிவித்தது. அதைத் தொடர்ந்து  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, டிசம்பர் 2011 ல் தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டார்.

அவற்றில் 552 பள்ளிகள் மட்டுமே மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது. மற்ற 158 பள்ளிகள் அந்த விதிமுறைகளை மட்டும் மட்டுமல்லாமல், மாநில அரசின் சார்பில் தரம் உயர்த்துவதற்கான 1 லட்சம் பொது மக்கள் நிதி அளிக்கும் விதியையும் கூட பூர்த்தி செய்யவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது  2009-10 ம் கல்வியாண்டில் 200 பள்ளிகளும், 2010 -11 ம் ஆண்டில் 344 பள்ளிகளும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனுமதியுடன் உயர்நிலைப்பள்ளிகளாக துவக்கப்பட்டன. அவற்றில் 200 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் பள்ளி ஒன்றுக்கு தலா 58 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் துவக்கப்பட்டன. பெற்றோர் சங்கங்களின் தலைவர் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை 170 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. 30 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது. 

இது மட்டுமின்றி 344 பள்ளிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 300 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. ஆனால் பழைய கட்டுமான பணிகளுக்கான விலையிலேயே கட்ட வேண்டும் என கூறியுள்ளது. இதனால் மாநில அரசின் நிதியுதவியை பெற்று கட்டுமானப்பணிகளையும் துவக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

கணிசமான எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளதை அறிந்த அரசியல்வாதிகள் தங்கள் பகுதியில் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என மட்டுமே அமைச்சரிடம்  கோரிக்கை வைத்து பெற்று சென்றுள்ளனர். அதன் பிறகு அந்தப் பள்ளிக்கான இடத்தை தேர்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் முயற்சியால் இதுவரை 160 முதல் 170 பள்ளிகளுக்கு மட்டுமே தேவையான இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.



இந்த நிலையில்  2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்த பின்னர் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா 2011-12 ம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் தங்களின் தொகுதியில் உள்ள பள்ளிகளின் பெயர் இடம் பெற்று, தரம் உயர்த்துவதில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் குறியாக இருந்தனர். பள்ளியை தரம் உயர்த்த தேவையான அனைத்து விதிமுறைகளும் சரியாக நிறைவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளிகளுக்கான இடத்தை தேர்வு செய்து அளிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை.

பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை மீறி, 158 பள்ளிகளை தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

இருப்பினும் கடந்த மே மாதம் நடைபெற்ற மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அனுமதி அளிக்கும் கூட்டத்தில், மொத்த மாநிலங்களில் 1096 புதிய பள்ளிகளில் கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் உள்ளதனால், இந்தாண்டு புதிதாக கட்டுமானப்பணிகளுக்கான நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்து இந்த 158 பள்ளிகளின் தரம் உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

-எம்.கார்த்தி

வினா - விடை புத்தகங்கள் மாவட்டங்களில் விற்பனை

  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது.

இந்த விற்பனை, சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பு: பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில், 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம், எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்


    ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல் வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

600 பள்ளிகள் : தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரியும் தகுதியை பெறுகின்றனர். மாணவ சமுதாயத்தின் அடித்தளமாக உள்ள, ஆரம்ப கல்வியை வலுப்படுத்தவும், ஆரம்ப கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, தரமுள்ளவர்களாக, திறமையானவர்களாக உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு உருவாக்கிய, 'ஆசிரியர் கல்விக் கொள்கை - 2009'ன் படி, பல மாநிலங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளன. கற்பித்தலில் புதிய யுக்தி : வலுவான பாடத்திட்டம், கற்பிக்கும் முறையில், புதிய யுக்திகள், மாணவர்களை, உளவியல் ரீதியாக அணுகி, சிறப்பான முறையில், கல்வி கற்பித்தல், கற்றல் - கற்பித்தலில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, கம்ப்யூட்டர் வழியிலான கற்பித்தல் என, பல புதிய திட்டங்கள், புதிய பாட திட்டங்களில் அமல்படுத்தப்படுகின்றன. கேரளாவில், கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், வரைவு பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது.

முதல் ஆண்டிற்கு, ஏழு பாடம், இரண்டாவது ஆண்டிற்கு, ஏழு பாடம் என, 14 பாடங்கள் இருக்கின்றன. வரைவு பாடத்திட்டம் தயார் : ஒவ்வொரு பாடத்திற்கும், ஐவர் அடங்கிய குழுவை அமைத்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய, இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. குழுவினர், பிற மாநிலங்களின் பாடத் திட்டம், கற்பித்தல் முறை, புதிய திட்டங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்து, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும், பாடத் திட்டம் எழுதும் பணி துவங்கும்.

அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், துறை திட்டமிட்டுள்ளது. மதிப்பீடு முறை மாறுகிறது : இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர், அய்யப்பன் கூறியதாவது: தற்போதைய பாடத் திட்டம், எழுத்து தேர்வின் அடிப்படையில், மாணவர்களை மதிப்பீடு செய்வதாக உள்ளது. புதிய பாடத்திட்டத்தில், தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு குறைவாகவும், உளவியல் ரீதியிலான மதிப்பீடு, கவனிக்கும் ஆற்றலின் அடிப்படையிலான மதிப்பீடு, பேச்சுத் திறன் அடிப்படையிலான மதிப்பீடு என, பல வகையான மதிப்பீட்டின் கீழ், மாணவர்களை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், கற்றல், கற்பித்தலில் கம்ப்யூட்டர் பயன்பாடு, கற்பித்தலில், புதிய அணுகுமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெறும். இவ்வாறு, அய்யப்பன் தெரிவித்தார்.

வரும் 30, 31ம் தேதிகளில் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு A


  அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளி களில், தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, வரும், 30ம் தேதியும், தற்போது இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் (உயர்நிலைப் பள்ளி) பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, 31ம் தேதியும் நடக்கிறது.

இணையதள வழியில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், காலை, 10:00 மணி முதல், கலந்தாய்வு நடக்கும். மேலும், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், 450 முதுகலை ஆசிரியரை, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கும். இவ்வாறு, இயக்குனர்

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு


மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார். இவர்  ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில்  ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

அவரிடம் பிடித்தம் செய்த தொகை -ரூபாய் -2,91,900/-

இவரை போல பல பேர் இன்னும்  ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால் ஓய்வூதியம் பெற முடியும் .

தகவல்: திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ்

தொடர்புக்கு-engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com

2014-IGNOU B.Ed Entrance Results

https://studentservices.ignou.ac.in/Openmat/BED2014/BEd_Entrance_Res2014.asp

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

http://m.tamil.thehindu.com/general/education/

ஆன் லைனில் கல்வித் தகுதியை பதிவு செய்யலாம்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.

புதிதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

* புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.

* முதலில் டபுள்யூடபுள்யூடபுள்யூ.டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் (http://tnvelaivaaippu.gov.in/Empower/) என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேஷன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

* அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர்ஐடி என்ற இடத்தில் புதிதாக ஒரு ஐடி கொடுக்கவும்.

* பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும், இமேஜ் கோடு என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடுஐ கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.

* அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்தி செய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.

கவனிக்க 1:

குவாலிபிகேஷன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதே போன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.

கவனிக்க 2:

மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.

கவனிக்க 3:

ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை கான்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

கவனிக்க 4:

அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.

ரெனிவல் செய்வதற்கான விபரம்: உதாரணத்திற்கு,

ரெஜிஸ்டர் நம்பர்: ஏஆர்டி2012 எம்00007502 (ரெஜிஸ்டர் நம்பர் இப்படித்தான் இருக்கும்)

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியீட்டு எண்: சியூடி-என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம் - கூடலூர்)

பதிவு செய்த ஆண்டு :2010

ஆண்/ பெண்: எம்/எப்

பதிவு எண்: 7802

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்து கொள்ளவும்.

யூசர்ஐடி: ஏஆர்டி2012எம்00007502

பாஸ்வேர்டு: டிடி/எம்எம்/ஒய்ஒய்ஒய்

கடவுச்சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ஐடி கார்டு இப்படித்தான் இருக்கும். அவ்வளவு தான் நண்பர்களே... இனி கால விரையமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.

Monday, October 27, 2014

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:


இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

Talent exam hall ticket

Click below


http://www.tndge.in/

Sunday, October 26, 2014

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29 -ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலைவெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி உடனடியாக நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள 600 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடன நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தபிறகும் எம்பில்- உயர்நிலைக்கல்விக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என அரசாணையைத்திருத்தி வெளியிட வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 250 -க்கும்மேல்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 29.10.2014 -ல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு,அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் (25.10.2014) சனிக்கிழமை சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவது, தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குசிறப்பு கலந்தாய்வு நடத்துவது,காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும்,இதரக்கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்தஉறுதியைத்தொடர்ந்து வரும் 29.10.2014 (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தலாம்

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கி வந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.