இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 28, 2014

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் 01.01.2014 முன்னுரிமைப் பட்டியலின்படி தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

  
2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு இரட்டைப்பட்டம் செல்லாது என தீர்ப்பளித்து எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது, ஆனால் தொடக்கக் கல்வி துறையில் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தற்பொழுது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயலாது எனவும் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒப்படைத்த 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திரும்ப பெற வாய்ப்பில்லை எனவும், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்த பணியிடங்கள் போக மீதம் உள்ள 253 பணியிடங்களுக்கு 2014 முன்னுரிமைப் படியலின்படி ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு. தியாகராஜன் அவர்களிடம் கேட்டபொழுது பள்ளிக்கல்வித்துறையில் நடத்தியது போல் தொடக்கக் கல்வித்துறையிலும் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதுகுறித்து உடனடியாக தொடக்கக் கல்வி இயக்குனரிடம் பேசி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இறுதி முடிவு விரைவில் தெரியவரும் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது அதிகாரிகள் திடீர் பாசமழை

      லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, வரும், 6ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துஉள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், முதல்வரின், ஸ்ரீரங்கம் தொகுதி யில், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதேபோல், வேறு சில சங்கத்தினரும், போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால், தமிழக அரசின் கோபத்திற்கு, தாங்கள் ஆளாக நேரிடும் என்பதால், போராட்டத்தை அடக்குவதற்கான வேலைகளில், கல்வித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

இதற்காக, சங்க நிர்வாகிகள் மீது, பாசமழை பொழிந்து வருகின்றனர். பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று, அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு விடுத்து, அவர்களிடம் நலம் விசாரித்து, பின், அவர்கள் கோரிக்கை குறித்து, பிற்பகல், 2:30 மணி வரை, பேச்சு நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர் சங்கம் என, பல சங்கங்களின் நிர்வாகிகள், தனித்தனியே, இயக்குனரை சந்தித்தனர். அப்போது, "உங்க கோரிக்கை எதுவா இருந்தாலும் சொல்லுங்க; அரசின் கவனத்துக்கு கொண்டு போய், உடனே, தீர்த்து வைச்சுடலாம்' என, ஆரம்பித்து, கோரிக்கை தொடர்பாக, துறை பணியாளர்களை உடனு குடன் அழைத்து, சங்க நிர்வாகிகள் முன், சீரியசாக விவாதித்தார்.

இதனால், கோரிக்கைகள் ஏற்கப்பட்டது போன்ற திருப்தியுடன், அலுவலகத்தில் இருந்து, நிர்வாகிகள், நடையை கட்டினர். சில மூத்த நிர்வாகிகளோ, "தேர்தல் நெருங்குவதால், முதல்வரை திருப்திபடுத்த, அதிகாரிகள் நடத்தும், அரசியல் ஸ்டண்ட்' எனக்கூறி, நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!


 பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

Thursday, February 27, 2014

Tetojac Forms

CEO OFFICE PHONE NUMBERS


1. CHENNAI 0442432735

2. COIMBATORE 04222391849

3.CUDDALORE 04142 286038

4.DHARMAPURI 04342 260085,261872

5. DINDIGUL 0451 2426947

6. ERODE 0424 2256499,9442205805

7. KANCHEEPURAM 044 27222128

8. KANYAKUMARI 04652 227275

9. KARUR 04324 241805

10. KRISHNAGIRI 04343 239249

11. MADURAI 0452 2530651

12. NAGAPATTINAM 04365 243354

13. NAMAKKAL 04286 232094

14. PERAMBALUR 04328 224020

15. PUDUKOTTAI 04322 222180

16. RAMNAD 04567 220666

17. SALEM 0427 2450254

18. SIVAGANGAI 04575 240408

19. TANJORE 04362 237096

20. NILGIRIS 0423 2443845

21. THENI 04546 250315

22. THIRUVANNAMALAI 04175 224379

23. TIRUVARUR 04366 225903

24. TRICHY 0431 2708900

25. TIRUNELVELI 0462 2500702

26. TUTICORIN 0461 2326281

27. VELLORE 0416 22526690

28. VILLUPURAM 04146 220402

29. VIRUDHANAGAR 04562 252702

FB : ALLA BAKASH 

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல-dinamalar

்ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

55 சதவீதம்:

டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர். டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கிட்டு, அரசாணை வௌ?யிட்டதில், தேர்வர்களுக்கு, மூன்று மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டு உள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கான, 150 மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படுகிறது. அதன் விவரம்:

* 90 - 100 சதவீத மதிப்பெண் எடுத்தால், 60 மதிப்பெண் (முழுமையாக வழங்கப்படுகிறது)

* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்

* 70 - 80 சதவீதம் வரை - 48

* 60 - 70 சதவீதம் வரை - 42

* 55 - 60 சதவீதம் வரை - 36

இவற்றில், முதல் நான்கு நிலை வரை, 10 சதவீதம் இடைவெளி அளவில், ஒவ்வொரு நிலைக்கும், 6 மதிப்பெண் வித்தியாசத்தில், படிப்படியாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.

பாதிப்பு:

ஆனால், கடைசி நிலையில், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான, ஐந்து சதவீத இடைவெளிக்குள் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டும், 36 மதிப்பெண் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடைவெளியில் வருபவர்களுக்கு, 6 மதிப்பெண் வித்தியாசம் எனில், 5 சதவீத இடைவெளிக்குள் இருப்பவர்களுக்கு, மூன்று மதிப்பெண் வித்தியாசம் வர வேண்டும். அதன்படி, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், மூன்று மதிப்பெண் குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், வேலைக்கான ஒட்டுமொத்த தேர்வு பட்டியலில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம், சலுகையை அறிவித்துவிட்டு, மறுபக்கம், இப்படி மதிப்பெண் குறைப்பது, எந்த வகையில் நியாயம் என, தேர்வர் கேள்வி எழுப்புகின்றனர். தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எதுவும் கூற முடியாது. முறையாக பார்த்தால், கடைசி நிலை தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால், இதை, நாங்கள் கூற முடியாது. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது. மதிப்பெண் சலுகையின் பின்னணியில் உள்ள பாதிப்பை, முதல்வர் விசாரித்து சரி செய்ய வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அறிவோம் அறிவியல் ஆற்றலை: இன்று தேசிய அறிவியல் தினம்

  
    அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி, என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான்.

வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல் தான். இரண்டும் கலந்ததே: எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான், இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள். நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப்பயிற்சியையும் இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

TET Exam passed canditate -thanks teachertn

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி
ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது.

தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Paper - CV finished + 55% relaxation = total
தாள் 1 ல் - 12596. + 17996. =30592
தாள் 2 ல் - 16932. + 24651. =41583

TOTAL. - 29528. + 42647. =72175

TET 2013 : district wise passed candidates PAPER 2


TET 2013 : district wise passed candidates PAPER 2
1. Chennai. 561

2. Ariyalur 361

3. Coimbatore 850

4. Cuddalore. 888

5. Dharmapuri 1284

6. Dindigul 983

7. Erode. 1157

8. Kanchipuram 540

9. Kanniyakumari 668

10. .Pudukkottai 547

11. Krishnagiri 756

12. Madurai 1257

13. Nagapattinam 473

14. Namakkal 893

15. Nilgiris 108

16. Karur. 509

17 Perambalur 339

18. Ramanatha 459
Puram

19. Salem 1570

20. Sivaganga 406

21. Thanjavur. 892

22. Theni 642

23. Thoothukudi 638

24. Thiruvarur 282

25. Tirunelveli. 1194

26. Tiruchirappalli 1086

27. Thiruvallur 616

28. Tiruppur. 401

29. Tiruvannamalai 1052

30. Vellore . 994

31. Villupuram. 1261

32. Virudhunagar. 984

THANKS TO MR. SENTHIL KUMAR. KILAKKARAI,

TET 2013 : district wise passed candidates PAPER 1


1. Chennai. 561

2. Ariyalur 219

3. Coimbatore 663

4. Cuddalore. 591

5. Dharmapuri 624

6. Dindigul 693

7. Erode. 905

8. Kanchipuram 531

9. Kanniyakumari 187

10. .Pudukkottai 436

11. Krishnagiri 574

12. Madurai 799

13. Nagapattinam 508

14. Namakkal 313

15. Nilgiris 93

16. Karur. 330

17 Perambalur 193

18. Ramanatha 404
Puram

19. Salem 1098

20. Sivaganga 335

21. Thanjavur. 676

22. Theni 540

23. Thoothukudi 517

24. Thiruvarur 390

25. Tirunelveli. 818

26. Tiruchirappalli 777

27. Thiruvallur 617

28. Tiruppur. 395

29. Tiruvannamalai. 680

30. Vellore . 896

31. Villupuram. 859

32. Virudhunagar. 774

THANKS TO MR ANANTHA KRISHNAN, THANJAVUR

Wednesday, February 26, 2014

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click Here for Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவ

   மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.

Monday, February 24, 2014

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர். அரியலூர் மாவட்டம், குமிலியம் பகுதியைச் சேர்ந்தவர், உடற்கல்வி ஆசிரியர், திருஞானசம்பந்தம். இவர், 30வது வயதில், சேலம் மாவட்டம், மேட்டூர், மேல்நிலை பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 28 ஆண்டு, ஒரே பள்ளியில் பணி புரிந்த, ஆசிரியர் திருஞானசம்பந்தம், ஏராளமான மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளார்;

ஏழை மாணவர்களுக்கு, சொந்த செலவில் பயிற்சி அளித்துள்ளார். கபடியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுத்தும் பாராட்டியுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் சம்பந்தம், கடந்த, 22ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, பிரமாண்ட பாராட்டு விழா நடத்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளி வளாகத்தில் கூடினர். முன்னாள் மாணவர்கள் சார்பில், விழாவுக்கு வந்த அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது. மாலையில் நடந்த பாராட்டு விழாவில், ஆசிரியர் திருஞானசம்பந்தத்துக்கு, மாணவர்கள், புதிய, 'பேஷன் புரோ' பைக், ஒரு தங்க பேனா, 1 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களை வழங்கினர். நேற்று முன்தினம் இரவு, மாணவர்கள், மூன்று பஸ்களில், அரியலூர் மாவட்டம், குமிலியத்தில் உள்ள வீட்டில், ஆசிரியரை கொண்டு விட்டு, பிரியா விடை பெற்றனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்

பி.எட். முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அரசாணையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தாள் மட்டுமே. தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 5 முதல் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது

. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY

அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல்:


1.திருவள்ளூர் (தனி)- பி.வேணுகோபால்
2.வேலூர் - செங்குட்டுவன்
3.சேலம்- வி.பன்னீர்செல்வம்
4.தென் சென்னை- ஜெயவர்த்தன்
5.மத்திய சென்னை- விஜகுமார்
6.தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி
7.தென்காசி (தனி)- வி.சாந்தி முருகேசன்
8.திருநெல்வேலி- பிரபாகரன்
9.கன்னியாகுமரி- ஜான் தங்கம்
10.விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன்
11.சிதம்பரம் (தனி)- சந்திரகாசி
12.மயிலாடுதுறை- பாரதி மோகன்
13.நாகப்பட்டினம் (தனி)- கோபால்
14.காஞ்சிபுரம்(தனி)- மரகதம் குமரவேல்
15.மதுரை- கோபாலகிருஷ்ணன்
16.தேனி- பார்த்திபன்
17.விருதுநகர்- ராதாகிருஷ்ணன்
18.ராமநாதபுரம்- அன்வர்ராஜா
19.அரக்கோணம்- கோ.அரி
20.கிருஷ்ணகிரி- அசோக்குமார்
21.வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்
22.ஸ்ரீபெரும்புதூர்- ராமச்சந்திரன்
23.தர்மபுரி- மோகன்
24.திருவண்ணாமலை- வனரோஜா
25.ஆரணி- ஏழுமலை
26.கள்ளக்குறிச்சி- காமராஜ்
27.நாமக்கல்- சுந்தரம்
28.ஈரோடு- செல்வகுமார் சின்னையன்
29.திருப்பூர்- சத்யபாமா
30.கோவை- நாகராஜன்
31.நீலகிரி (தனி) - கோபாலகிருஷ்ணன்
32.பொள்ளாச்சி- மகேந்திரன்
33.திண்டுக்கல்- உதயகுமார்
34.கரூர்- தம்பிதுரை
35.திருச்சி- ப.குமார்
36.பெரம்பலூர்- மருதை ராஜன்
37.கடலூர்- அருண்மொழி தேவன்
38.தஞ்சை- பரசுராமன்
39.சிவகங்கை- செந்தில்நாதன்
40.புதுச்சேரி- எம்.வி.ஓமலிங்கம்

Saturday, February 22, 2014

"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்

தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், "பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள் புலம்புகின்றன. தேர்வுத்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க, "ஆன்-லைன்' முறையில், பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதற்காக, மாணவ, மாணவியர், "பிரவுசிங்' மையங்களில் குவிகின்றனர். பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவது, புகைப்படத்தை, "ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளை, இணைய தள மைய பணியாளர்கள் செய்கின்றனர்.

இதற்காக, 200 ரூபாய் முதல், பலவாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2, "தட்கல்' திட்டத்திற்காக, தேர்வுத்துறை, புதிய நடவடிக்கை எடுத்தது. "தனியார் மையங்களில், பதிவு செய்யக்கூடாது. தேர்வுத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலமாக மட்டுமே, பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, 32 மாவட்டங்களிலும், தேர்வுத்துறையே, சிறப்பு மையங்களை அமைத்து, 50 ரூபாய் கட்டணத்தில், மாணவரின் விவரங்களை பதிவு செய்ய, நடடிக்கை எடுத்தது. இதனால், தனியார் இணையதள மையங்கள் வெறிச்சோடின. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர்,

தேவராஜன் கூறியதாவது: பணத்தை வசூலிப்பது மட்டுமே, பிரவுசிங் சென்டர் களின் குறியாக உள்ளது. மாணவரின் விவரங்களை, சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில், அக்கறை இல்லை. பிறந்த தேதியை மாற்றி பதிவது, புகைப்படத்தை, சரியான முறையில், "ஸ்கேன்' செய்யாதது, முகவரியை பதிவு செய்வதில் தவறு என, பல குழப்பங்களை செய்கின்றனர். இதனால், மாணவர் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கவே, நேரடியாக, நாங்களே, சிறப்பு மையங்களை அமைத்தோம். இதன்மூலம், மாணவர் விவரங்கள், சரியாக பதிவு செய்வது உறுதிப்படுத்தியது உடன், மாணவர்களுக்கான செலவு, 50 ரூபாயில் முடிந்து விடுகிறது. இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார். தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ மையங்களில், பதிவு நடப்பதும், அதற்காக, குறைந்த கட்டணம் வசூலிப்பதும், மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது. இனி, வரும் தேர்வுகளிலும், இதேபோன்று, சிறப்பு மையங்கள் அமைக்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.