இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 07, 2014

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சிதேர்வு நேரத்தில் சிக்கல்

   பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை இக்குழு கவனிக்கிறது. இக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மேலாண்மை குழு சார்பில் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் பங்கேற்க வேண்டும்.

பயிற்சி டிச. 15 முதல் 17 வரை ஒரு பிரிவு, 18 முதல் 20ம் தேதி வரை ஒரு பிரிவாக நடத்தப்படும். சாக்கோட்டை வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறியதாவது: டிச.15 முதல் 20 வரை தொடக்க பள்ளி மாணவருக்கான 2-ம் பருவ தேர்வு நேரம். ஈராசிரியர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பயிற்சிக்கு சென்றால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இந்த மாதத்தில் 18 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. அதில் 3 நாள் இப்பயிற்சிக்கும், மேலும் 2 நாள் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்டத்திலும் கழிந்துவிடும். இதனால் தேர்வுக்கு மாணவரை தயார்படுத்துவதில் சிரமம் உள்ளது. வரும் காலங்களிலாவது இதை தவிர்க்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment