இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 12, 2014

தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: கடந்த ஜூலையில் 110விதியின் கீழ் 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பணி நிரவல் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்: மதுரை கள்ளிக்குடி வடக்கம்பட்டி பள்ளி, திண்டுக்கல் தொட்டம்பட்டி மேல்கரைபட்டி பள்ளி, நத்தம் புரளிபுத்தூர் பள்ளி, தேனி போடி நாயக்கனூர் ராசிங்கபுரம் பள்ளி, ராமநாதபுரம் திருவாடானை ரெகுநாதபுரம் பள்ளி, சிவகங்கை முடிகண்டம் பள்ளி, விருதுநகர் சாத்தூர் என்.ஜி.ஓ.,காலனி பள்ளி, சிவகாசி கோப்பை நாயக்கன்பட்டி பள்ளி, வெம்பக்கோட்டை முத்தாண்டியாபுரம் பள்ளி ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment