இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 01, 2014

ஏ.டி.எம். கட்டணம்: மேலும் பல வங்கிகளில் இன்று முதல் அமல்!

ஏ.டி.எம் களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறையை மேலும் பல வங்கிகள் இன்று முதல் அமல்படுத்தியுள்ளன. வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம். களில் பணம் எடுக்க மாதத்திற்கு 5 முறை மற்றும் பிற வங்கி ஏ.டி. எம்-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 20 ரூபாய் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததை தொடர்ந்து அத்திட்டம் கடந்த மாதம் 1 ஆம் தேதி முதலே டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வந்தது.

பல வங்கிகள் இந்த முறையை நடைமுறைப்படுத்திவிட்டன. இருப்பினும் இன்று முதல் மேலும் சில வங்கிகள் இந்த முறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. எனினும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடாக் மகேந்திரா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த முறையை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment