இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 17, 2014

9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

அனைத்து விதமான பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முழுக்கால் சட்டை (பேண்ட்) அணிய வேண்டும். மேலும், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது உறுதிச் சான்றிதழையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment