இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 24, 2014

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒற்றுமை தினமாக ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



இந்த தினத்தில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை எடுப்பதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதி மொழி எடுப்பதோடு, அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. காவல் துறை, தேசிய ஆயுதப் படை, தேசிய மாணவர் படை உள்ளிட்டவை மாலையில் அணிவகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 31ம் தேதி, நடத்தப்பட உள்ள மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஓட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினத்தில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment