இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, October 26, 2014

அந்தந்த தேர்வு மையங்களிலேயே அக்.27 முதல் மதிப்பெண் சான்றுகள்

     "பிளஸ் 2 தனி தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த தேர்வு மையங்களில் அக்.27 முதல் மதிப்பெண் சான்றுகளை பெறலாம்” என அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். அவரது உத்தரவு: செப்டம்பர்-அக்டோபரில் நடந்த பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் (தட்கல் தேர்வர் உட்பட) மதிப்பெண் சான்றுகளை, அக்.27, பிற்பகம் 2 மணி முதல் தேர்வு எழுதிய மையங்களில் பெறலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது.

இம்மாணவர்கள் மதிப்பெண் சான்றுகளை பெற்று, விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், கல்வி மாவட்ட அளவில் உள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்தில் அக்.29 முதல் 31ம் தேதி வரை உரிய கட்டணத்துடன் ஆன்லைன் கட்டணம் ரூ.50 செலுத்தி பதிவு செய்யலாம். விடைத்தாள் நகல் பெற, மொழிப் பாடங்களுக்கு தலா ரூ.550, பிற பாடங்கள் ஒன்வொன்றிற்கும் ரூ.275, மறுகூட்டலுக்கு மொழி பாடங்கள், உயிரியியல் பாடங்களுக்கு தலா ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டவேண்டும். தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் இணையதளத்தில் விடைத்தாள் நகலை டவுன்லோடு செய்யலாம் என்றார்.

No comments:

Post a Comment