இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 19, 2014

அக்.,15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் அக்.,15ல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்தப்பணிகளும் துவங்குகின்றன.இந்தாண்டு ஜன.,10ல் புதிய வாக்காளர் பெயர்பட்டியல், லோக்சபா தேர்தலையொட்டி ஏப்.,5ல் வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட்டன.

அதன்பின் தொடர் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அக்.,10ல் அப்பணி முடிகிறது. இம்மூன்று பட்டியல்களும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அக்.,15ல் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் பெயர் இடம்பெறாதவர்கள் அன்று துவங்கி 20 நாட்கள் வரை நடக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்த பட்டியல் பணிகளில் பெயர் சேர்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் 2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்களை பட்டியலில் புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிக்கான மனுக்களை தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் தரலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்லுாரி மாணவர்களை இப்பட்டியலில் சேர்க்க மாணவ பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்,என்றார்.

No comments:

Post a Comment