இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 09, 2014

பொது பட்ஜெட் துளிகள்

* நிர்பயா நிதி மூலம் பெண்கள் பாதுகாப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

* சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* பிராட்பேண்ட் மூலம் கிராமங்கள் இணைக்கப்படும்.

* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33000 கோடி ஒதுக்கீடு.

* வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அளித்து மேலும் பொறுப்புடமையாக்க பரிசீலனை.

* தபால் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டால் உள்ள நிதியை பயன்படுத்துவதை ஆராய குழு.

* நாட்டில் புதிதாக 5 ஐஐடி மற்றும் 5 ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

* அடுத்து 6 மாதங்களில் 9 முக்கிய விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோருக்கு ஊக்குவிப்பு.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்துத்தர 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.

* மின் விநியோக திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* ஆந்திர மகாராஷ்டிரா, மேற்கும்வங்கம், உத்தரபிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பல் மருத்துவம், காசநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.

* படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

* சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

* தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.

* டெல்லியை போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

*  பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

* சுற்றுலாவை மேம்படுத்த மின்னணு விசா முறை 9 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும்.

* பயணிகள் வருகை தந்ததும் விசா பெற வசதி செய்யப்படும்.

* கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* வேலைவாய்ப்புக்கு உதவ பயிற்சிகள் அளிக்கும் வகையில் திறன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு.

* 2019ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின் வசதியை ஏற்படுத்துவதே இலக்கு.

* கிராமப்புற மின்வசதியை அதிகரிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும்.

* தொழிற்துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த தனிக்குழு அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பொருட்கள், சேவை வரிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

* ராணுவத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 21 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

* 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரி வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும்.

* வரி வசூலிப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.

* முதலீட்டாளர்களுக்கு சாதகமான வரிக்கொள்கைகள் உருவாக்கப்படும்.

* பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகதமாக அதிகரிக்கப்படும்.

* காப்பீட்டு்துறையிலும்  அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

* பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்டப்படும்.

* 2018ஆம் ஆண்டுக்குள் வங்கிகளுக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.

* வலுவான இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.

* அரசின் செலவினங்களை நிர்வகிக்க தனிக் குழு நியமிக்கப்படும்.

* பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

No comments:

Post a Comment