இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 10, 2014

2014ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் - கல்வி தொடர்பான நிதி ஒதுக்கீடுகள-tnkalvi


நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜுலை 10ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், மதிய உணவு திட்டத்திற்காக, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் பல்வேறான பிரிவுகளில், கல்விக்கென்று நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை,

* மதிய உணவுத் திட்டத்திற்கு, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சர்வ சிக்சா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,250 கோடி ஒதுக்கீடு

* நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பான முறையில் மறுநிர்மாணம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அதற்கான குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

கல்வித்துறை தொடர்பான இதர அறிவிப்புகள்

* ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 4 எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உயர்கல்விக்கான வங்கிக் கடன் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* ரூ.30 கோடியில் பள்ளி மதிப்பாய்வு திட்டம் தொடங்கப்படும்.

* அசாம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், வேளாண் மற்றும் விவசாய தொழில்நுட்பத்திற்கான 2 புதிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.

* அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2 ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும்

* பெங்களூர் மற்றும் ஹரியானாவின் பரிதாபாத்தில், 2 புதிய பயோடெக்னாலஜி கொத்துக்கள்(clusters) தொடங்கப்படும்.

* பள்ளிப் பாடத்திட்டமானது பாலின முக்கியத்துவம் குறித்த ஒரு தனி அத்தியாயத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்ற செயல்திட்டம்.

* சுங்கம் மற்றும் கலால் துறை தொடர்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு தேசிய கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்பு பதிவு மையங்கள், கேரியர் மையங்களாக மாற்றப்பட்டு, தகவல் மற்றும் ஆலோசனை உதவிகள் வழங்கப்படுவதற்கான திட்டம்.

* பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம், நானோடெக்னாலஜி துறைக்கான 5 தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் வலுப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment