இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 08, 2014

அரசு பள்ளி மின் கட்டணம்: இயக்குனரகம் முடிவு

  அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், 23 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்கு, தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பிரித்து தரப்படுகிறது. இதில், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த, சில நாள் கால தாமதம் ஆனாலும், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை, மின்வாரியத்திற்கு, தொடக்கக் கல்வித் துறை சமீபத்தில் வழங்கி உள்ளது.

மேலும், மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில், 30 ஆயிரம் பள்ளிகளின் மின் கட்டண விவரங்களை, மாவட்ட வாரியாக, தொடக்கக் கல்வித் துறை, இயக்குனரகத்திற்கு தெரிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இயக்குனரகமே மின் கட்டணத்தை செலுத்தும் எனவும், மின் வாரிய அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டதும், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.

இந்த பள்ளிகளிலும், ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, தொடக்கக் கல்வித் துறையை போல், பள்ளிக்கல்வி இயக்குனரகமே, நேரடியாக மின் கட்டணத்தை செலுத்தினால், பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை வராது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, துவக்கப் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடுநிலைப் பள்ளியாகவும் தமிழகத்தில் உள்ளது.

No comments:

Post a Comment