இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 02, 2014

என்ஜினீயரிங் படிப்பு விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம் கவுன்சிலிங் ஜூன் 3-வது வாரத்தில் தொடங்குகிறது

  
   என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே மாதம் முதல் வாரத்தில் வினியோகிக்கப்படும் என்றும் ஜூன் 3-வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். மே முதல் வாரத்தில் என்ஜினீயரிங் விண்ணப்பம் பிளஸ்-2 தேர்வு கடந்த 25-ந்தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதுபோல இந்த வருடமும் மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது விற்கப்படும் என்று கேட்டதற்கு அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அளித்த பதில் வருமாறு:- கடந்த வருடம் போல இந்த வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் என்ஜினீயரிங் விண்ணப்பம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 59 இடங்களில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் இணையதளத்தில் அரசு தேர்வுத்துறை வெளியிடும் பிளஸ்-2 மதிப்பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து அனுப்ப வேண்டும். கலந்தாய்வு தொடக்கம் பின்னர் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

கலந்தாய்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும். பொது கலந்தாய்வு எப்படியும் ஒரு மாதத்திற்கு அதிகமாக நடைபெறும். ஜூலை 31-ந்தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பி.இ. முதலாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment