இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 16, 2014

ஜூன் 16-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம

     வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்; மீதமுள்ள வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்வுகள் நிறைவடைந்தன: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்தன. ஓரிரு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சித் தேதிகளும், தேர்வு தேதிகளும் குறுக்கிட்டுள்ளன

. இதனால், இந்த மாவட்டங்களில் மட்டும் வியாழக்கிழமையும் தேர்வு நடைபெறும். தேர்வுகள் முடிவடைந்தாலும், பள்ளிகள் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தொடக்கக் கல்வித் துறை:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்பட உள்ளன. இந்தப் பள்ளிகளில் தேர்வுகள் அடுத்த வாரத்தில் தொடங்குகின்றன. வாக்குப்பதிவு தினத்தையடுத்து, ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தினங்கள் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

1 முதல் 4-ஆம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அந்த மாணவர்கள் மூன்றாம் பருவத் தேர்வை எழுதுவது அவசியம் இல்லை. இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடைகால விடுமுறை விடப்படுகிறது.

No comments:

Post a Comment