இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 31, 2013

பெட்ரோல் விலை ரூ1-15 பைசா குறைக்கப்பட்டுள்ளது.டீசல் விலை 50பைசா அதிகரிப்பு. இன்று நள்ளிரவு முதல் அமல்

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும், வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும்,  இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

courtesy:tnkalvi

Wednesday, October 30, 2013

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான "நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது. டிசம்பர் 29-ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்., 30 கடைசித் தேதி. ஆன்-லைனிலிருந்து பதிவிறக்கம் செய்த வங்கி செலான் மூலம் ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவ., 2 கடைசித் தேதி.

பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு, வருகை ரசீது ஆகியவற்றை நவம்பர் 5 முதல் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 9 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களை www.ugcnetonline.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(அக்.,31) கடைசி நாள்.

வாக்காளர் அடையாள அட்டை தற்போது "லேமினேட்' செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி.., யின் குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் ஒன்றாம் தேதி குரூப் 2 தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம் அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள்-தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம்,

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கடந்த கல்வி ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி வேலை நாட்களில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் குறுவள மைய பயிற்சி மற்றும் 10 நாட்கள் வட்டார வள மைய அளவில் பயிற்சி, ஆண்டுக்கு 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதிகமான பயிற்சிகள் வழங்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பயிற்சி நாட்கள் ஆண்டுக்கு 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே வேளையில் பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ளும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர்கள் விடுமுறை நாளில் பணியாற்றினால் அவர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.தற்போது விடுமுறை நாட்களில் பயிற்சியில் பங்கேற்கும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும். 6 மாதங்கள் வரை இந்த ஈடு செய் விடுப்பை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்  

கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் கே.சி.வீரமணியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

விராலிமலை எம்.எல்.ஏ, டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார். மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சராக நியமித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. புதிய அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நவம்பர் 1ஆம் தேதி பதவியேற்கிறார்.

இரட்டைப்பட்டம் வழக்கு-ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு ஒரு வருட  வழக்கறிஞர் ஆஜராகாததால் மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மீண்டும் நாளைக்கு விசாராணைக்கு வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது.விசாரணை ஒத்திவைப்பவ

தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும

அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

சுற்றறிக்கையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

* பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்

* பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது

* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.

* பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.

* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.

* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.

* பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.

* பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.

* விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி, பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 29, 2013

பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி..,!

நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை

இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை சந்தித்து வரும் வெள்ளி கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனர்.

  பின்பு வரும் வெள்ளி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர் அனுமதி கடிதத்தில் வி.இ.சி தலைவர் ஒப்புதலுடன், பிறிதொரு சனிக்கிழமை ஈடுசெய் விடுப்பாக அளிக்கலாம் எனக் கூறினார்

Monday, October 28, 2013

ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டதால், தமிழ் பேசும் மாணவர்கள் குறைந்து போவார்களோ என்ற கவலை உள்ளது. தமிழ் மொழி அதன் செல்வாக்கை இழந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது என்றார். அப்போது அமைச்சர் பி.பழனியப்பன் கூறியது:

ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்புக்கு என்று செல்லும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் ஆங்கில வழிக் கல்விக்காகவே தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளையும் தவிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் 1.21 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது.

இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும்.

நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

Saturday, October 26, 2013

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் மறுப்பு: முதல்வர் தலையிட கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணம், 5,000 ரூபாய் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன், ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதன் அடிப்படையில், பல பண்டிகைகளுக்கு, ஏற்கனவே, 5,000 ரூபாய், முன் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, போதுமான பணம் ஒதுக்கீடு இல்லை என, காரணம் கூறி, கருவூலகங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு, முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அரசுத் துறைகளின், தலைமை அலுவலர்களை, தொடர்பு கொண்டால், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால், அரசு ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன் பணத்திற்கு, போதுமான நிதி வழங்க வேண்டியது, அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்

. எனவே, தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும், முன் பணம் வழங்கிட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Friday, October 25, 2013

"செஸ்' விளையாட்டை ஊக்கவிக்கும், மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசு, பள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது; முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக, மாவட்டந்தோறும், கல்வி மாவட்ட, மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன; மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள், 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவ, மாணவியர் வீதம், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை பின்னுக்கு தள்ளி, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் ஆதங்கம்:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:"பணக்கார விளையாட்டு' எனப்படும் செஸ் விளையாட்டை, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் வீடுகளிலேயே விளையாடுகின்றனர்; பல மாணவர்கள் ஆங்காங்கே உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று, அதிகபட்சம் மாதம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, பயிற்சி பெறுகின்றனர். விளையாடும் போது, "டைமர்' உபகரணம் வைத்து, சர்வதேச விதிகளுக்கு உட்பட்டுவிளையாடுகின்றனர்.

மாறாக, கிராமப்புற அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, செஸ் விளையாட்டு என்பது புதிது; அவர்களில் பலர் செஸ் விளையாடினாலும், "டைமர்' இல்லாமல், விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவு இல்லாமல் தான் விளையாடுகின்றனர். சமீபத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள், மெட்ரிக்., பள்ளி மாணவர்களுடன் மோதினர். மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் "டைமர்' வைத்து, நுட்பத்துடன் விளையாடிதை பார்த்து, அரசு பள்ளி மாணவர்கள் பயந்து, நிலை குலைந்து போயினர். மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையான திறமையை அரசு பள்ளி மாணவ, மாணவியரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு பயனைஅளிக்கவில்லை.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.

செஸ் போர்டு எங்கே?"மாநில அரசின் இச்சிறப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் பள்ளிகளுக்கு, தலா 900 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு, அதில் 9 செஸ் பலகைகள் வாங்கப்பட வேண்டும்; பள்ளிகள் தோறும் "செஸ் கிளப்' உருவாக்கப்பட வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரே ஒரு செஸ் பலகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; பல பள்ளிகளில் செஸ் கிளப்புகள் துவங்கப்படவில்லை. எனவே, இச்சிறப்பு திட்டத்தில் உள்ள குறைகளை களைய, மாநில அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது.

இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும். இப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு

தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, அவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரைப் பற்றிய, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. மாநிலத்தில், பிளஸ் 2 வரை, 1.3 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இதுவரை, 1.2 கோடி மாணவ, மாணவியரின் விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார். இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது:

இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, படிப்படியாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்கள் குறித்த விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மாணவர், ஒரு பள்ளியை விட்டு, வேறொரு பள்ளியில் சேர, "ஸ்மார்ட் கார்டை' பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், ஒரு மாணவர், தற்போது என்ன வகுப்பு படிக்கிறார்; படிக்கிறாரா, இல்லையா; படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாரா என்பது உட்பட, அனைத்து தகவல்களையும், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு முறை மூலம் அறிய முடியும். அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பணிகளையும், இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்க முடியும். இவ்வாறு, செயலர் தெரிவித்தார்.

"பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறையில் தணிக்கை தடைகள் ஏற்படாமலும், நிர்வாக ரீதியாகவும் தலைமையாசிரியர்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தணிக்கை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

. குறிப்பாக, பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சிறப்பு "கவுன்சிலிங்' அளிப்பதற்காக, 10 "மொபைல்' வேன்கள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த "கவுன்சி லிங்' முறையால் தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு திட்டம்: காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் (ஸ்லோ லேனர்ஸ்) பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாடவாரியாக சிறப்பு கையேடுகள் தயாரித்து வழங்கவும், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் குழு ஏற்படுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு ஆசிரியர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படவு உள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான நலத்திட்ட பொருட்களை வைப்பதற்கு மாவட்டங்கள் தோறும் அரசு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்.

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், ஆண் ஆசிரியர்களும், மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில், ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு, நடப்பாண்டு முதல் தீவிரமாக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். மாநிலம் முழுவதும் 650 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட் உத்தரவிற்கு பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, சென்னை, கோவை, மதுரை ஆகிய மண்டலங்களின் தணிக்கை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

குரூப் -1 தேர்வமுடிவு 3மாதத்தில் வெளியீடு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்-1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1372 பேர்களுக்கு மெயின் தேர்வு நடத்த அழைப்பு அனுப்பப்பட்டது.

இன்று  அந்த தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடக்கும் இந்த தேர்வு பொதுஅறிவை சோதிக்கும் தேர்வு ஆகும். கேள்விகள் அனைத்தும் கட்டுரை எழுதும்படி இருக்கும். தேர்வு  நாளையும் நாளை மறுநாள் தேர்வு நடக்கிறது. தேர்வு நடப்பதை பார்வையிட அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன்  திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி உள்பட சில மையங்களை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 16 சதவீதத்தினர் வரவில்லை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எந்த தவறும் இன்றி நேர்மையான முறையில் நடத்தி வருகிறோம். அதுபோலத்தான் குரூப்-1 தேர்வை நடத்துகிறோம்.

இநத தேர்வை 1372 பேர்கள் எழுத தகுதி உடையவர்கள். ஆனால் அவர்களில் 84 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்துள்ளனர். 16 சதவீதத்தினர் வரவில்லை. தேர்வு அறைகளில் பட்டதாரிகள் தேர்வு எழுதும்போது வீடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் முடிவு வெளியீடு பட்டதாரிகள் எழுதிய விடைத்தாள்கள், சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்வார்கள். தேர்வு முடிவை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம்.அதாவது 3 மாதத்திற்குள் வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம். குரூப்-2 தேர்வு டிசம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.

அப்போது தான் ஐ.ஏ.எஸ். தேர்வு நடக்கிறது. இரு தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் குரூப்-2 தேர்வை வேறு ஒரு தேதியில் தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது குறைந்தது 15 பேர்களாவது இரு தேர்வையும் எழுதுகிறோம் என்று கூறி இரு தேர்வுகளுக்கு உரிய ஹால் டிக்கெட்டுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்¬வாணையத்தின் இணையதளத்திற்கு அனுப்பிவைத்தால் தேர்வு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.