இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 31, 2013

Special instructor Computer Teacher

120 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

  ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது.

1,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வில் பங்கேற்றும், மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது. இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல், மீண்டும், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில், பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறி, தேர்வர்கள், தொடர்ந்த வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்) நீக்கம் செய்து, மீதம் உள்ள, 130 மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் தேர்வுப் பட்டியலை, இணையதளத்தில், (www.trb.tn.nic.in) நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு, பள்ளி கல்வித் துறையில், இம்மாத இறுதிக்குள், பணி நியமனம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, January 30, 2013

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணி இடங்கள், தேர்வு மூலம் நிரப்பப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி

– இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேர்வுமுறை

–பாடத்திட்டம் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும். தனித்தனி தேர்வுகள் குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

வி.ஏ.ஓ. தேர்வில் அதிரடி மாற்றம் மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும். நடப்புகால நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

TNPSC Annual Planner 2013-14

Tuesday, January 29, 2013

Pay roll 9.0 version

TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் .

இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார். TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது .

கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் மையங்களுக்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் 3,200 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மன்றத்துக்கு ரூ.2,500 வீதம் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீர், மண், காற்று ஆகியவற்றினை பாதிக்கக் கூடிய சூழல் விவரங்களை அறிந்து கொள்வதற்காக, தமிழகத்திலுள்ள ஆயிரம் பள்ளிகளுக்கு நீர், மண் ஆய்வக பரிசோதனை உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு காற்று ஆய்வு உபகரணமும் வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இயற்கைச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம், வன உயிரின தடய அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், தாவரங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான கள ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சி நிறுவனம் ரூ.27.13 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இந்த நிறுவனத்தில் பணியாற்ற 8 பணியிடங்களை உருவாக்கவும், இந்தத் திட்டத்தால் அரசுக்கு ரூ.26.99 லட்சம் தொடர் செலவினம் ஏற்படும்.

பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிப்பு

  பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வுகள் வரும் மார்ச் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 5ம் தேதி மொழித்தாள் ஒன்று, 8ம் தேதி மொழித்தாள் இரண்டு, 12ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 13ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் ஆகிய தேர்வுகள் நடக்கும். 19ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகளும், 20ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும், 22ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியலும், 26ம் தேதி கணிதம் மற்றும் வணிக கணிதமும், 28ம் தேதி உயிரியல் மற்றும் வணிகவியல் ஆகிய தேர்வுகளும் நடக்கும் என தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் காலாண்டு அளவிலான வட்டி விகிதத்தை மறு ஆய்வு செய்யும் கூட்டம் மும்பையில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் அவர் தெரிவித்தார்.

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. மேலும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு 0.25 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் வசமுள்ள ரூ. 18 ஆயிரம் கோடி மதிப்பிலான ரொக்கத்தை வெளியிட இயலும். வீட்டு வசதி, வாகனம் மற்றும் நிறுவனங்களுக்கான கடன் இதன் மூலம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது.இந்த அறிவிப்பு, முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சிக்கு உதவும் என்றும் பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கவும் இது உதவும் என்றும் அவர் கூறினார்.

Monday, January 28, 2013

"வெப்சைட்' மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள் "ஆன்- லைன்' பதிவுக்கு வசூல் dinamalar

"ஸ்மார்ட் கார்டு' பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, "ஆன்-லைனில்' பதிவு செய்ய, தனியார், "வெப்சைட்' மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆன்-லைன் பதிவிற்கு மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் அனைத்து விவரங்கள் கொண்ட, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 80 லட்சம் மாணவர்களுக்கு கார்டுகள் தயாராகின்றன. மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, தலைமையாசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களின் விவரங்களை சேகரித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாணவர் விவரங்கள் கொண்ட விண்ணப்பங்களுடன், போட்டோக்களையும், "ஸ்கேன்' செய்து, கல்வி துறை ஆன்-லைனில், "அப்டேட்' செய்ய, தலைமையாசிரியர்களுக்கு, தற்போது உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்பணியை, ஜன., 31க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு, அனைத்து மாவட்டங்களிலும், தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு வாரங்களுக்கு நீட்டித்து, கல்வி துறை உத்தரவிட்டது. ஆன்-லைன் பதிவு குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது

: மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு முறை வரவேற்கத்தக்கது. அவரச கோலத்தில் இப்பணியை முடிக்க, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். மாநில அளவில், 25 சதவீத பள்ளிகளில் தான், முழுமையான கணினி வசதி உள்ளது. 75 சதவீத, தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளில், இந்த வசதி இல்லை. இதனால், தனியார் வெப்சைட் மையங்களுக்கு சென்று தான், மாணவர்களின் போட்டோக்களை ஸ்கேன் செய்து, ஆன்-லைனில் பதிய, ஒரு மாணவருக்கு, ஏழு நிமிடங்கள் ஆகின்றன. மின் வெட்டு, பிராட்பேண்ட் பிரச்னைகளும் உள்ளன. ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம், 7 ரூபாய் செலவாகிறது. இதை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. மற்ற பணிகளும் பாதிக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆன்-லைன் பதிவுகளை மேற்கொள்ள, தலைமையாசிரியர்களை வற்புறுத்த கூடாது என்பது உள்பட, 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர்நிலை, மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

22 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலும், தேசிய அளவிலும், விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2012க்கான தேசிய விருது, வரும், செப்., 5ம் தேதி, டில்லியில் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 22 சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான இறுதி கட்டப்பணி, டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், தேர்வுக் குழுவின் சிறப்பு உறுப்பினராக, மைசூர் மண்டல கல்வி நிறுவன பேராசிரியர் ரமா மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், மத்திய இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மெட்ரிக் கல்வி இயக்குனர் வசுந்தரா, சென்னை மாநகராட்சி பள்ளிகள் இணை கமிஷனர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் குறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கூறியதாவது:

ஏற்கனவே, விண்ணப்பங்களை பெற்று, தகுதியான ஆசிரியர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்து விட்டோம். இந்த பட்டியலை, பிற மாநில உறுப்பினர் பார்வையிட்டு, ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதற்காக, இந்த கூட்டம் நடந்தது. தகுதி வாய்ந்த, 22 ஆசிரியர்களின் பட்டியல், கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு, செப்., 5ல், டில்லியில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மாநில அளவிலான விருதுக்கு, 350 பேர், தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பணி, விரைவில் துவங்கி, ஆகஸ்ட்டில் முடிவடையும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள்? ஆண்டு தேர்வு பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நாளைi வெளியிடுகிறது

எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள்? என்ற ஆண்டு தேர்வு பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நாளை ் (புதன்கிழமை) வெளியிடுகிறது. இதில் ஏறத்தாழ 20 ஆயிரம் காலி இடங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தேர்வுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர் பணி தொடங்கி துணை கலெக்டர் பதவி வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என பல்வேறு விதமான போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற உயர்பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும், நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட சார்நிலை பதவிகள் குரூப்–2 போட்டித்தேர்வு மூலமாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

ஆண்டு தேர்வு பட்டியல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் போன்ற தேர்வாணையங்கள் ஓராண்டில் என்னென்ன பதவிகளுக்கு என்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற தேர்வுபட்டியலை முன்கூட்டியே வெளியிட்டுவிடும். இது தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்போருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதே போன்று, டி.என்.பி.எஸ்.சி.யும் ஆண்டு தேர்வுபட்டியல் (ஆனுவல் பிளானர்) முறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதில், எவ்வளவு காலி இடங்கள்? தேர்வு நாள், தேர்வுமுடிவு வெளியாகும் தேதி, நேர்முகத்தேர்வு நாள், இறுதி தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி என அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருந்தது. காலக்கெடுவுடன் தேர்வு நடத்தப்பட்டதால் தேர்வுக்கு தயாராகும் மாணவ–மாணவிகளும் உற்சாகத்தோடு படித்தார்கள்.

நாளை மறுநாள்  வெளியாகிறது இந்த நிலையில், 2013–ம் ஆண்டு தேர்வுபட்டியல் ஜனவரி 28–ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவித்து இருந்தார். ஒவ்வொரு தேர்வுக்கான தேதியும் யு.பி.எஸ்.சி., ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், வங்கிப்பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் தேர்வு தேதியும் ஒரேநாளில் வந்துவிடக்கூடாது என்பது துல்லியமாக ஆய்வு செய்யப்படுவதால் இப்பணி உரிய காலத்தில் முடியவில்லை. இன்ற்றைய நிலவரப்படி, தேர்வு தேதி முடிவுசெய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே, தேர்வுபட்டியல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.

தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் வெளியிட, முதல் பிரதியை அதன் செயலாளர் மா.விஜயகுமார் பெற்றுக்கொள்கிறார். அன்றைய தினம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் தேர்வுபட்டியல் வெளியிடப்படும். 20 ஆயிரம் காலி இடங்கள் குரூப்–4 தேர்வு நிலையில் 10 ஆயிரம் இடங்களும், குரூப்–2 தேர்வு நிலையில் 6 ஆயிரம் இடங்களும், இதர தேர்வுகளையும் சேர்த்து ஏறத்தாழ 20 ஆயிரம் காலி இடங்கள் இந்த தேர்வுபட்டியல் மூலம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Madras University Results

Saturday, January 26, 2013

8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!

"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறியதாவது:நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன்.

மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன். நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.

சென்னை பல்கலைதேர்வு முடிவுகள் வெளியீடு

  சென்னை பல்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு, நவம்பரில், தேர்வு நடந்தது.இத்தேர்வு முடிவுகள், www.unom.ac.in, www.kalvimalar.com, www.examresults.net, உள்ளிட்ட இணையதளங்களில், நாளை வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் பெறுவது, தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்டவை குறித்த விவரங்களை, பல்கலை இணையதளத்தில் பெறலாம்.சென்னை பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் விவரம் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய கூடாது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் முருக. செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர், இரவு நேரக்காவலர், அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தொடக்க கல்வித் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒன்றிய, உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேலை நிறுத்த உரிமை, தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் 48 மணி நேர பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளது. இதில் தேசபக்த உணர்வோடு ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.