இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 31, 2013

தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந்தேதி  பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கு.தேவராஜன் கூறியுள்ளார்.

""தமிழகத்தில் 4340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில் நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளத

  மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் "இன்ஸ்பையர்டு' விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாக (இன்னோவேஷன் இன் சயின்ஸ் பர்சூட் பார் இன்ஸ்பைர்டு ரிசர்ச்- இன்ஸ்பையர்) நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட கண்காட்சியிலும் தேர்வு செய்யப் பட்ட பள்ளி மாணவர்கள், படைப்புகளுடன் பங்கேற்றனர். கண்காட்சியை கலெக்டர் சுப்ர மணியன், மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தனர்.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ""மதுரையில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார். அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வரவேற்றார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ஏ.சங்கர் பேசியதாவது:

இளம் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, இதுபோன்ற நிகழ்ச்சிகளை முதல்வர் செயல்படுத்துகிறார். கல்வித்துறையில் 4340 பள்ளிகளில், ஐ.சி.டி., என்னும் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல் படுத்தப்பட உள்ளது. 21ம் நூற்றாண்டில் மரபணு பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை மனித வளர்ச்சிக்கு பலவகை களில் உதவி வருகிறது, என்றார். முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, இணை இயக்குனர் செல்லம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி பங்கேற்றனர். அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் நன்றி கூறினார்.

Friday, August 30, 2013

தொடக்க/நடுநிலைப்பள்ளி தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு பதவி உயர்வு 31-8-13 அன்று நடைபெறுகிறது. பட்டதாரிகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளதால் கலந்தாய்வு நடைபெறாது

"1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்'

""தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார். அவர், கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடங்களை நடத்துவதில் சிரமம் உள்ளது. இதனால், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுக்கு பின், இடைநிலை ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பழைய காலி பணியிடங்களுடன், கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கும் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பணியிடத்திற்கு, ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.

அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என மத்திய அரசு உறுதி

ி: "மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:

"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.

ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மறியலில் ஈடுபட்டஆசிரியர்கள் கைது -Dinamalar

்:ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 410 பேரை, போலீசார் கைது செய்தனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பள உயர்வு வழங்க வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, முந்தைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ஜெயலட்சுமி, செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசு ஊழியர்சங்க நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, வாகனங்களில் ஏற்றினர். கைகளில் அமைப்பு கொடியுடன் இருந்த ஆசிரியர்கள் சிலர் ஓடிச்சென்று, ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 282 பெண்கள் உட்பட 410 ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 10ம் தேதி துவக்கம்

    காலாண்டு தேர்வு, பிளஸ் 2வுக்கு, செப்டம்பர், 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர், 10ல் தமிழ் முதல்தாளுடன் தேர்வு துவங்குகிறது. செப்டம்பர், 11ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், செப்டம்பர், 12ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர், 13ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், செப்டம்பர், 14ம் தேதி கணிதம், விலங்கியல், செப்டம்பர், 17ம் தேதி வணிகவியல், புவியியல், ஹோம்சயின்ஸ், செப்டம்பர், 18 தேதி, இயற்பியல், பொருளியல், செப்., 19ம் தேதி, கம்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, புள்ளியியல், செப்டம்பர், 20ம் தேதி, வேதியியல், அக்கவுண்டன்ஸி, செப்டம்பர், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல், பிஸினெஸ் மாத்ஸ் தேர்வு, காலை, 10 மணி முதல் மதியம், 1.15 மணி வரை நடத்தப்படுகிறது.

அடுத்ததாக பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர்,12ம் தேதி, தமிழ் முதல்தாள், செப்டம்பர், 13ம் தேதி தமிழ் இரண்டாம்தாள், செப்டம்பர், 14 ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், செப்டம்பர், 18 கணிதம், செப்டம்பர், 19ம் தேதி அறிவியல், செப்டம்பர், 20ம் தேதி, சமூக அறிவியல் தேர்வு, காலை, 10 மணி முதல், மதியம், 12.45 மணி வரை நடக்கிறது.

குரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு

குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின் அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-4 தேர்வு மூலம், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 516 காலிப் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. நான்காவது கட்ட கலந்தாய்வு மூலம், இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

செப்., 4, 5 தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில், காலை, 8:30 மணி முதல் கலந்தாய்வு நடக்கும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள், எந்த தேதியில் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட இரண்டு, "செட்' ஜெராக்ஸ் பிரதிகள் ஆகியவற்றை, கலந்தாய்வுக்கு வரும் போது, கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மறியல்

            தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போர் திருப்பூர் குமரன் சிலை முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.மாநில செயற்குழு உறுப்பினர் திரு.பாலமுரளி தலைமை வகித்தார்.

  செயலர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.அரசு ஊழியர் சங்கம்,BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர்.710 ஆசிரியர்கள் கலந்துகொண்டர்.புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் உட்பட
       3பேருந்துகளில் ஆறுமுறை அழைத்து சென்றனர்.கே.எஸ்.ஆர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.ஆரஞ்சு,வாழை முதலியவை பொறுப்பாளர்கள் வாங்கி கொடுத்தனர்
       பத்து பேர் கனகராஜா,மோகன்,பாலு,முத்துச்சாமி,சுரேஷ்,மணி உட்பட பஸ் மறியல் செய்தோம். காவலர்கள் இழுத்துச் சென்றனர்

திருப்பூர் ஆர்ப்பாட்டம் 700 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர் பங்கேற்பு





Thursday, August 29, 2013

TNPTF Paper News


தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மறுகூட்டல் கட்டண ரசீதை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

: பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, செப்., 2ம் தேதிக்குள், தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை வலியுறுத்தி உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: கடந்த பொதுத் தேர்வுக்குப்பின் நடந்த உடனடித் தேர்வில் பங்கேற்று, அதன்பின், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விண்ணப்பித்த, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், அதற்குரிய கட்டண செலானை, தேர்வுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை, கட்டண ரசீதை சமர்ப்பிக்காத தேர்வர்கள், "கூடுதல் செயலர் (மேல்நிலை), தேர்வுத்துறை இயக்குனரகம், சென்னை-6' என்ற முகவரியில், நேரிலோ, தபால் மூலமோ, செப்., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். கட்டண ரசீதை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்படாது; மறுகூட்டல் முடிவும், வெளியிடப்படாது. இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

IGNOU B.ed Hall ticket 2013

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சுற்றுபுற மன்ற செயல்திட்டம் ECO CLUB

Wednesday, August 28, 2013

"தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா,

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், முதல் வாரத்தில் துவங்கி, கடைசி வாரத்தில் முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல், முதல் வாரத்தில் முடியும். இதன்படி தான், பல ஆண்டுகளாக, தேர்வுகள் நடந்து வருகின்றன. இரு தேர்வுகளுமே, தனித்தனியாகத் தான் நடக்கின்றன. அப்படியிருக்கும் போதே, பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. கடந்த பொதுத்தேர்வில் கூட, 10ம் வகுப்பு தேர்வில், பல குளறுபடிகள் நடந்தன.

இது போன்ற நிலையில், "பிளஸ் 2 தேர்வுகளுக்கு இடையே வரும் விடுமுறை நாட்களில், 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாம்' என, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சிலர், தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜனிடம் தெரிவித்துள்ளனர். இதனால், "வரும் பொதுத்தேர்வு, ஒன்றாக நடத்தப்படலாம்' என, தகவல்கள் வெளியாயின. இது குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை, இயக்குனரிடம் கூறியுள்ளனர்; அவ்வளவு தான். தற்போதைய தேர்வு நடைமுறையில், எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அது போன்ற எண்ணமும், துறைக்கு இல்லை. மாணவர்கள், தேவையில்லாமல் குழப்பம் அடைய வேண்டாம். பொதுவாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். தேவராஜன் கூறுகையில்,

""10ம் வகுப்பு தேர்வை, ஒரு மாதம் முன்கூட்டியே நடத்துவது குறித்து, தேர்வுத் துறை, எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் தான், இந்த ஆண்டும் தேர்வு நடக்கும்,'' என்றார். இரண்டு தேர்வுகளையும், ஒன்றாக நடத்தினால், பெரும் குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு தேர்வு மையத்தில், பிளஸ் 2 கேள்வித்தாள்களும், 10ம் வகுப்பு கேள்வித்தாள்களும் இருந்தால், தேர்வின் போது, கேள்வித்தாள்களை, மாற்றி வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், நடைமுறை ரீதியாக, பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, August 27, 2013

ஆறாம் வகுப்பிலேயே "லேப்' அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்

""ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, "லேப்'களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்,'' என, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார். கல்வியில் பின்தங்கிய, 44 ஒன்றியங்களில், 44 மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆர்.எம்.எஸ்.ஏ., மாநில இயக்குனர், சங்கர் பேசியதாவது:

மாணவர்கள், பல வகையாக இருப்பர். அனைத்து மாணவர்களுக்கும், ஒருவித தனித்திறமை இருக்கும். அதை, கண்டறியும் பணியை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். சில மாணவர்கள், பாடத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், விளையாட்டுகளில், ஆர்வம் அதிகம் இருக்கும். இதுபோன்று, மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதில், மாணவர்களின் திறமையை மேலும் வளர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான், மாணவர்கள், "லேப்'களுக்கு, அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவர்களை, "லேப்'களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியலை விளக்க வேண்டும். மாதிரிப் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு, சங்கர் பேசினார்.

ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் உத்தரவு

   லோக்சபா தேர்தலுக்காக, 2014 ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, புது வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். ஜன., 6ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் லோக்சபா தேர்தலில், தகுதி உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 2014 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.

நீக்கம், திருத்தம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்படும். அக்டோபரில், ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர்கள் சேர்க்கப்படுவர். "இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின், ஏஜன்ட்கள் பங்கேற்று, வாக்காளர்கள் விடுபடாமல், தேர்தல் கமிஷனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தப் பணிகளுக்கு பின், இறுதிப் பட்டியல், 2014 ஜன., 6ல் வெளியிடப்படும்.

ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்

பெயர் பழைய பதவி புதிய பதவி

1. பிரபாகர் முதன்மைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை

2. ராமச்சந்திரன் மேலாண் இயக்குனர், ஆவின் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை
3. சுனில் பாலீவால் செயலர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மேலாண் இயக்குனர், ஆவின்
4. இறையன்பு முதன்மைச் செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை
5. அனிதா பிரவீன் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனம் (டுபிசெல்) முதன்மைச் செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை
6. அபூர்வா திட்ட இயக்குனர், சுனாமி திட்ட அலாக்கப் பிரிவு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை
7. பூஜா குல்கர்னி இணை செயலர், தொழில் துறை மாநிலத் திட்ட இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான் 8. விவேகானந்தன் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' கழகம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்ட இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்
9. மகேஸ்வரன் மாநிலத் திட்ட இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.

சிவில் சர்விஸ் முதன்மை தேர்வு: டிசம்பர் -1ம் தேதி முதல் துவக்கம

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் முதன்மைத் தேர்வு (மெயின்), டிசம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.கடந்த மே மாதத்தில் யுபிஎஸ்சி(பிரிமிலினரி தேர்வு) நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதார்கள் செப்டம்பர் 10ம் தேதிக்குள் http://upscdaf.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் வழியாக விண்ணப்பித்த படிவத்தை, நகல் எடுத்து Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு செப்டம்பர் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவத்துடன், கல்வி சான்றிதழ்கள், வயதுக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருப்பின், அவர்களுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.

www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அவர்களுக்கான அனுமதிக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு யுபிஎஸ்சி வலைதளத்தை அணுகலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இன்று வெளியிடப்பட்டுள்ளன.இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் மனு செய்யலாம். இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போது ஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுநேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது முக்கிய விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விடைகள் தொடர்பான ஆட்சேபங்கள் பெறப்பட்டவுடன் ஒவ்வொரு பாடவாரியாக அவை பரிசீலிக்கப்படும்.இதைப் பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுக்கள்  அமைக்கப்படும்.

அந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேபங்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து, இறுதிசெய்ய்பட்ட விடைகளுடன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டுக்குப் பிறகு இறுதி விடைகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.